Tuesday, February 12, 2008

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதர் மாயம்: தாலிபான்கள் கடத்தல்?


இஸ்லமாபாத்: ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நாட்டு தூதர் திடீரென மாயமாகிவிட்டார். அவரை தலிபான்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிசூதீன், தனது நாட்டின் பெஷாவர் நகரிலிருந்து காரில் காபூல் நகருக்கு சென்று கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியான கைபர் என்ற இடத்தில் தனது காரை விட்டு விட்டு, மற்றொரு காரில் அவர் செல்ல வேண்டும்.ஆனால் எல்லைப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அவரது கார் மாயமாகிவிட்டது. தூதரும் அவரது ஓட்டுநரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.அவர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸான்-ஆப்கானிஸ்தான் சாலை மூடப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியதே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தான் என்பதும், இப்போதும் கூட தலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுக உதவிகள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

No comments: